வெற்றி பெற்றவர்களுக்கான பிரிசு வழங்கும் நிகழ்வு கொழும்பில் அமைந்துள்ள- தாமரை தடாக கலையரங்கத்தில் 21-02-2013 அன்று சிறப்பாக நடைபெற்றது.75 ஆயிரம் ரூபாவுக்கான காசோலையும்- சான்றிதழும் செல்வி வித்தியாவுக்கு வழங்கப்பட்டன.
செல்வி வித்தியா அவர்கள்-எங்கள் அல்லைப்பிட்டி கிராமசேவையாளரின் புதல்வி என்பதுடன்-மண்டைதீவையும் அல்லைப்பிட்டியையும் தன்து இரு கண்களாக நேசிக்கின்றார் என்பதனை இவரது எழுத்துக்களிலிருந்து நாம் தெரிந்து கொண்டோம்.அத்தோடு இவர் சிறந்த நிழற்பிடிப்பாளரும் கூட-இவரினால் அல்லைப்பிட்டி மண்டைதீவில் எடுக்கப்பட்ட சில நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.அத்தோடு இவரது எழுத்துக்களில் சமுதாய அக்கைறையும்-ஆவேசமும் கலந்தே தெரிகின்றது.
எமது கிராமத்திற்கு பெரும்புகழைச் சேர்த்திருக்கும் செல்வி ரட்ணேஸ்வரன் வித்தியா அவர்கள்-மேலும் புகழ் பெற்று விளங்க அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் ஆண்டவன் துணை புரிய வேண்டுகின்றோம்.



மேலே உள்ள படத்தில் பரிசு பெறுபவரே-செல்வி ரட்ணேஸ்வரன் வித்தியா ஆவார்




.png)
.png)
.png)

No comments:
Post a Comment