வேலணை மண்கும்பான் கடற்கரையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று சனியன்று மாலை 5 மணியளவில் கரையொதுங்கியுள்ளது.
குறித்த சடலம் முற்றிலும் உருக்குலைந்த நிலையில் காணப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த ஊர்காவற்றுறைப் பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கரையொதுங்கிய சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலத்தை இனம் காணும் நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment